Tuesday 27 September 2016

தவறை ஒத்துக்கொள்ளும் போதே நீதிக்கான பயணம் ஆரம்பிக்கிறது....

அரசாங்கம் முதலில் தனது தவறை ஒத்துக்  கொள்ள வேண்டும். தங்களின் தவறை கௌரவ குறைச்சலாக நினைத்து , தவறை மூடி மறைக்க ஆரம்பிக்கும் போதே பிரச்சனைகள் அதிகமாகின்றன.

"டெங்கு காய்ச்சல் பரவுவவது உண்மை தான். இனி விழிப்போடிருந்து மக்களின் சுகாதாரத்தை காப்போம்" என்று அரசாங்கம் சொல்வதில் தவறேதுமில்லை.

உண்மையில் உண்மையை ஒத்துக்கொள்ளும் இப்படிப்பட்ட அரசாங்கம் தான் இங்கு தேவைப்படுகிறது. ஆனால் அரசாங்கமோ "மர்ம காய்ச்சல் பரவுகிறது" என்று பொத்தாம் பொதுவாக சொல்லி தமது தவறை மூடி மறைக்கிறது.

" டெங்கு காய்ச்சல் அதிகமுள்ள மாநிலம் என்ற அவப்பெயர் வந்து விடுமோ " என்ற போலி கெரளவத்திற்காக உண்மையை மறைக்கலாமா...?

தவறை ஒத்துக்கொள்ளும் போதே நீதிக்கான பயணம் ஆரம்பிக்கிறது....

No comments:

Post a Comment

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...