Wednesday 22 February 2012

வீண் புகழ்ச்சி அது ஆட்சிக்கு கேடு......!

                                               "23 -ஆம் புலிகேசி" படத்தில் மன்னரை புகழ்ந்து பேசும் போது "வீண் புகழ்ச்சி அது ஆட்சிக்கு கேடு" என்று ஒரு வசனம் வரும்.தன் தலைவராக நினைக்கும் கருணாநிதி அவர்களுக்கு இந்த வசனம் பொருந்தும் என்று வடிவேலு கூட யோசித்திருக்க மாட்டார்.

                                                மக்கள் ஈழம் பற்றி எறிந்த போதும்,விலைவாசியால் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது வாரம் ஏலு நாட்களும் தன்னை மற்றவர்கள் புகழ்வதை கேட்டுக் கொண்டிருந்தார்.ஆட்சி மாறிய பின்பும் காட்சிகள் மாறவில்லை.நாளை பிறந்த நாள் கொண்டாடும் முதல்வருக்கு உடன் பிறப்புகளால் சென்னை முழுதும் "நாளைய பாரதமே" என்று பதாகைகளும்,சுவரொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.இப்படி வீண் வேலைகளில் ஈடுபடுவதை விட மக்கள் நலனில் அக்கறைக் காட்டினால் நல்லது.

இல்லையென்றால் "வீண் புகழ்ச்சி அது ஆட்சிக்கு கேடு"........!

Tuesday 21 February 2012

சுவர் விளம்பரங்களால் மட்டுமே புரட்சி செய்திட முடியுமா என்ன....?






தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் ஆகஸ்ட் மாதத்தில்(இன்னும்
ஆறு மாதம் கழித்து),ஆனால் இப்போதே "அடங்க மறுத்த சுனாமியே" வாழ்க பல்லாண்டு என்று திருமாவளவன் கோபமா முறைத்துக் கொண்டிருக்கும் சுவர் விளம்பரங்கள் சென்னையில் இப்போதே வைத்து விட்டனர்.பின்புறத்தில் மக்களின் அடிமை விலங்கை உடைத்தெறிய போராடிய பெரியார், பிரபாகரன். அம்பேத்கர் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சுவர் விளம்பரங்களால் மட்டுமே புரட்சி செய்திட முடியுமா என்ன....?

Monday 20 February 2012

தமிழீழ தேசியத் தாய்க்கு வீரவணக்கங்கள்......



தமிழனத்தை தலைநிமிர செய்த தமிழீழ தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரனை ஈன்ற பார்வதி அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று.

தமிழீழ தேசியத் தாய்க்கு வீரவணக்கங்கள்......

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...