Thursday 29 September 2016

ஆர்.எஸ்.எஸும் அப்பாவிகளும்....

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அத்வானி , உமாபாரதி போன்றோர் அதை இரசித்துக்கொண்டும் , மகிழ்ச்சியில் இனிப்புகளை சாப்பிட்டுக்கொண்டும் இருந்தனர்.

கரசேவகர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மசூதியை இடிக்கும் பணியில் இருந்தனர்.

பொதுவாகவே பார்ப்பனர்கள் எந்த சண்டையிலும் முன்னுக்கு நிற்பதில்லை. அதே நேரத்தில் தாம் நினைத்ததை பிறரை தூண்டி நிறைவேற்றி விடுவார்கள். அப்படி நிறைவேற்றப்பட்டது தான் "பாபர் மசூதி இடிப்பு" , பின்பு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளும்.

அதன்படியே அத்வானி வேடிக்கை பார்க்க , இந்து மத வெறியேற்றப்பட்ட அப்பாவி பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் மசூதியை இடித்துக்கொண்டிருந்தார்கள். இவர்களை  தான் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்க பார்ப்பனர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

தேவைக்கு பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிவது தான் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தின் கொள்கை.

அன்றைய காலத்தில் அரசர்களுக்கு ஆலோசனை செல்பவர்களாக பார்ப்பனர்கள் இருந்தார்கள். அரசர்களை விட சிறப்பாகவே வாழ்ந்தார்கள். அவர்களுக்கு சேவகம் செய்யவே குறிப்பிட்ட மக்களை பயன்படுத்தினர். " சூத்திரர்கள் இழிதொழில் செய்யவும் , பார்ப்பனர்களுக்கும் , அரசனுக்கும் சேவகம் செய்யவே படைக்கப்பட்டவர்கள் " என்று வேதம் சொல்வதாக நம்ப வைக்கப்பட்டார்கள்.

அன்றைய காலம் போல் இப்போது மன்னராட்சி இல்லை, தீண்டாமை என்பது காலத்திற்கு காலம் மாற்றம் பெறுகிறது. அதன் நவீன வடிவமாக தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பார்க்க வேண்டும்.

பார்பனர்களுக்காக சண்டை போட , மசூதிகளை இடிக்க , மத சண்டைகளை உருவாக்க ஆள் தேவைப்படுகிறது. அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ் , இந்து முன்னணி போன்றவைகள். இவர்களுக்கான அரசியல் கட்சி பா.ச.க.

திருவிழாக்கள் நடத்துவது , கபடி போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்துவதன் மூலம் மக்களை திரட்டி பயிற்சி கொடுப்பது , இந்து மத பெருமைகள் , வேதகால பெருமைகள் பேசி மூளைச்சலவை செய்து வன்முறைக்கு தயார்ப்படுத்துவது தான் இவர்களின் வேலையாக உள்ளது.

அப்படிப்பட்ட வன்முறை தான் கோவையில் நடந்தது. வன்முறை மூலம் "இந்து மக்களின் பிரதிநிதி" என்ற பிம்பம் கிடைக்கிறது. அதை தேர்தலில் அறுவடை செய்ய நினைக்கிறார்கள்.

இதற்கு நாம் இடம் அளித்து விடக்கூடாது. இது திருவள்ளுவர் பிறந்த மண் , வள்ளலார் பிறந்த மண் , நம்முடைய வழிபாட்டு முறைகள் வேறு , நம்முடைய தமிழ் மொழியை இவர்கள் ஏற்கமாட்டார்கள்.

சமற்கிருத பார்ப்பன அடிமைகளாக நாம் இருக்க கூடாது. இதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆரிய பிரச்சரத்தை தமிழ் கொண்டும் , தமிழர் வழிபாடு கொண்டும் எதிர்த்திடுவோம்....!

No comments:

Post a Comment

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...