Monday 7 March 2016

அகதியிலும் இனப் பாகுபாடு

அகதிகளில் கூட இனப் பாகுபாடு உண்டு.

திபெத் , பங்களாதேஷ் அகதிகளுக்கு இருக்கும் சுதந்திரம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவில் இல்லை.

இந்திய முகாமில் கைதிகளாக தான் ஈழத் தமிழர்கள் உள்ளனர். இன்று கூட உச்சப்பட்டி முகாமில் வருவாய் துறை அதிகாரியின் தொடர் தொந்தரவால் ஈழத் தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

பங்களாதேஷிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கு உடனே குடியுரிமை கொடுக்கப்படுகிறது. பல வருடங்களாக இங்கையே பிறந்து வாழும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது.

ஆம் , அகதிகளில் கூட இனப் பாகுபாடு உண்டு இந்தியாவில்.....

Tuesday 1 March 2016

" ஏழு தமிழர் விடுதலை " புத்தக வெளியீட்டு விழா

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூலின் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், 28.02.2016 அன்று மாலை, சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

நூல் வெளியீட்டு நிகழ்வில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொதுச் செயலாளர் இயக்குநர் திரு. ஆர்.கே. செல்வமணி, நூலை வெளியிட இயக்குநர் வெற்றிமாறன் முதற்படி பெற்றுக் கொண்டார்.

இயக்குநர் வெற்றிவெல் சந்திரசேகர், தொழில் முனைவோர் திரு. தாரை. மு. திருஞானசம்பந்தம், தமிழின உணர்வாளர் புலவர் இரத்தினவேலவர், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கச் செயலாளர் திரு. நெடுமாறன், ஊடகவியலாளர் திரு. கார்ட்டூனிஸ்ட் பாலா, ஓவியர் கு. புகழேந்தி, தமிழர் ஆன்மிகச் செயற்பாட்டாளர் திருவாட்டி. கலையரசி, ‘லாக்கப்’ நாவலாசிரியர் திரு. சந்திரக்குமார் ஆகியோர் சிறப்புப்படி பெற்றனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்பு செய்தார்.

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...