Tuesday 27 September 2016

தமிழ் மொழியில் அறிவியல் :

ஆங்கிலம் பிறக்காத காலத்திலேயே உலகம் வியக்கும் வகையில் - ஆற்றைத் தடுத்துக் கல்லணை கட்டியிருக்கிறோம்,

"ஆனால், ஆங்கிலத்தில் தான் எல்லாம் இருக்கிறது, நம் மொழியில் எதுவுமில்லை" என்று புரிந்து கொள்கிறார்கள்.

"ரசமட்டம்" என்று தமிழில் சொன்னால் அவர் கொத்தனார். ஆனால் "மெர்குரி லெவல்" என்று ஆங்கிலத்தில் சொன்னால் அவன் இன்ஜினியர்.

"வேப்பங்குச்சி"என்று சொன்னால் அவன் பட்டிக்காட்டான். ஆனால் "நீம் டூத் பேஸ்ட்" என்று சொன்னால் அவன் நாகரிகத்தவன்.

"இட்லி பானை" என்று சொன்னால் அவன் கிராமத்தான். ஆனால் "பிரசர் குக்கர்" என்று சொன்னால் அவன் நாகரிகத்தவன். இவ்வாறு நாம் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம்.

"ஆடிப்பட்டம் தேடி விதை "என்பது தமிழில் பழமொழி. ஆனால், அதிலொரு அறிவியல் உண்மை இருக்கிறது.

இதை ஏன் நாம் இழக்க வேண்டும்..? இந்த அறிவியலை இந்த உலக சமூகம் ஏன் இழக்க வேண்டும்...?
...........................................
தோழர் கி.வெங்கட்ராமன்,தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

No comments:

Post a Comment

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...