Friday 22 July 2016

காஷ்மீர் பிரச்சினையில் நம் பார்வை சரியா....?

காஷ்மீர் எங்க இருக்கு...?

ஈரோடு பக்கம் இல்ல தூத்துக்குடி பக்கம் இருப்பது போலவே சில நண்பர்கள் நினைத்துக் கொண்டு " காஷ்மீர் இந்தியாவின் அங்கம் " என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு மிகைப்படுத்தப்பட்ட இந்திய தேசபக்தியின் வெளிப்பாடு தானே தவிர உண்மை அல்ல.

1947--ல் இந்தியாவை உருவாக்கும் போது. பல தேசங்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்ற காரணத்திற்காக இந்தியாவோடு இணைந்தன. அரசு கட்டி ஆண்ட தமிழர்கள் கூட பிரிட்டிஷ் எதிர்ப்பின் காரணமாகவே இணைந்தனர். இந்தியாவோடு இணைவதற்கு தமிழ்நாட்டிலும் எதிர்ப்புகள் இருந்தது.

நாகாலாந்து , மணிப்பூர் உட்பட பல தேசங்கள் துப்பாக்கிகளை காட்டி மிரட்டி இணைக்கப்பட்டன.

சில தேசங்கள் ஆசைவார்த்திக் காட்டி இணைக்கப்பட்டன. "ஐநா சபையிடம் பேசி தனி நாட்டிற்கான  பொதுவாக்கெடுப்பு நடத்துகிறோம் " என்ற ஆசைவார்த்தையால் இணைக்கப்பட்ட தேசம் தான் காஷ்மீர்.

இன்று வரை இந்தியா காஷ்மீர் மக்களிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. மாறாக அவர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்கிறது , அபகரிக்க துடிக்கிறது. பாகிஸ்தானும் மறுமுனையில் இதையே செய்கிறது.

இரு நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் அம்மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்வோம். அவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம்......!

No comments:

Post a Comment

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...