(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2015 ஏப்ரல் 16 இதழில் வெளியானது.)
Tuesday 27 December 2016
" ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி " -- தமிழ்த் தேசிய பேரியக்கம்.
(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2015 ஏப்ரல் 16 இதழில் வெளியானது.)
Monday 7 November 2016
தமிழர் ஒத்துழையாமை இயக்கம்
எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை ; இனி புதியப் போராட்டம் நடத்துவோம்.
காந்தியடிகள் வெள்ளை ஏகாதியப்படுத்தியத்தை , எதிர்த்து 1920--ல் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் போல், தமிழர்களை வஞ்சிக்கும் இந்திய அரசை எதிர்த்து "தமிழர் ஒத்துழையாமை இயக்கம்" நடத்துவோம். நம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம்!!!!
தமிழர் ஒத்துழையாமை இயக்கத்தின் வேலைத் திட்டங்கள் :
1. இந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து தமிழ்நாட்டை சேர்ந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும் .
2. தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்.
3. இந்திய அரசு அளிக்கும் சிறப்பு விருதுகளை தமிழ்நாட்டு சான்றோர்கள் , எழுத்தாளர்கள், கலைஞர்கள், வீரர்கள், வாங்க கூடாது. நல்லாசிரியர் விருதுகளை தமிழ்நாட்டு ஆசிரியர்கள் வாங்க கூடாது.
4. நடுவண் அமைச்சர்கள் தமிழ்நாட்டில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். நடுவண் அமைச்சர்களுக்கு கருப்பு கொடி காட்ட வேண்டும்.
5. இந்திய அரசு வங்கிகளில் தமிழ்நாட்டு உழவர்கள் வாங்கியுள்ள வேளாண் கடன்களை திருப்பி செலுத்த வேண்டாம்.
6. காவிரி படுகையிலிருந்து பெட்ரோலியம் , எரிவளி , மீத்தேன், நிலக்கரி உள்ளிட்ட எந்த கனிமத்தையும் கனிமத்தையும் இந்திய அரசு எடுக்க அனுமதிக்க கூடாது.
7. தமிழ்நாடு அரசு கர்நாடகத்திற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
8. கர்நாடகத்தில் உற்பத்தியாகும் அரிசி, மஞ்சள், புகையிலை, உள்ளிட்ட எந்த பொருளையும் தமிழ்நாட்டு சந்தையில் அனுமதிக்க கூடாது.
இப்பொருட்களை தமிழ்நாட்டு வணிகர்களும், தமிழ் மக்களும் புறக்கணிக்க வேண்டும்.
9. நெய்வேலியிலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை அங்கு பணிபுரிவோரும் , தமிழ் மக்களும் நிறுத்த வேண்டும்.
10. தமிழ்நாட்டில் கன்னட திரைப்படங்கள் ஓட அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டு திரைப்பட துறையினர் கர்நாடக திரைப்பட துறையினருடன் எந்தவகை தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.
"தமிழர் ஒத்துழையாமை இயக்கத்திற்கு" ஆதரவு தாரீர்.
----தமிழ்த் தேசியப் பேரியக்கம்----
Tuesday 25 October 2016
உத்தர்பிரதேஷில் வாரிசு அரசியல் :
முலாயம் சிங் கட்சி உறுப்பினராக சேர்ந்த பெண்ணை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்கிறார் முதல் மனைவி இறந்த பின்பே இரண்டாவது மனைவி பற்றி வேட்புமனு தாக்கலின் போது தெரிவிக்கிறார்.
மூத்த மகனை திருப்திப்படுத்த முதல்வர் பதவி , மருமகளுக்கு பாராளமன்ற உறுப்பினர் பதவி.
இரண்டாவது மனைவியை சமாளிக்க , இன்னொரு மருமகளுக்கு பாராளமன்ற உறுப்பினர் பதவி.
அப்பாவின் ஆதரவாளர்களை அமைச்சர் பதவியிலிருந்து மகன் நீக்குகிறார். , ஆதரவாளர்களை கட்சியை விட்டு தந்தை நீக்குகிறார்.
கட்சிக்காக பாடுபட்ட உறுப்பினர்கள் , வேதனையில் இப்படியாக "வாரிசு அரசியல்" உத்தரப்பிரதேஷத்தில்....
Saturday 22 October 2016
தூக்கை தூக்கில் ஏற்றுவோம்...
தூக்கை தூக்கில் ஏற்றுவோம்...
நியாயமான மரணதண்டனை என்ற ஒன்றில்லை. மரண தண்டனையே தவறு தான்.
என்ன ஒன்று , சௌதி அரசர் தன் பேரன் என்பதற்காக சட்டத்தை மாற்றவில்லை. மக்களுக்கு என்னவோ , அதுவே தன் பேரனுக்கும் என்ற அவரின் நிலை நன்று.இதோடு நீங்கள் இந்தியாவை யோசித்துப் பாருங்கள்.
சல்மான் கான் மீது நியாயமான விசாரணை கூட நடைபெறவில்லை , தீவிரவாத செயலில் ஈடுபட்ட சஞ்சய் தத் சிறை தண்டனையை அனுபவிக்கவே இல்லை. ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லல்லு பிரசாத் உள்ளிட்ட அரசியல்வாதிகள் வெளியே நிம்மதியாக.உள்ளனர்.
சிறை காலம் முடிந்தும் பேரறிவாளன் , நளினி உள்ளிட்ட தோழர்கள் இன்னும் சிறைக்குள்ளே. எவ்வித ஆதாரமும் இல்லாமல் ராம்குமாரை கைது செய்து சிறைக்குள்ளே சாகடிக்கப்பட்ட வரலாறுகள் இந்தியாவின் நீதி வரலாறாக உள்ளது.
இப்படியான நாட்டில் தான் "சௌதி போல் சட்டம் கடுமையாக வேண்டும்" என்ற குரல்கள் ஒலிக்கின்றன. அப்படி ஒரு நிலை வந்தால் அப்பாவிகள் தான் மீண்டும் பலி கொடுக்கப்படுவார்கள்...!
விபத்தின்றி பயணிப்போம்....
விபத்தின்றி பயணிப்போம்....
Thursday 29 September 2016
ஆர்.எஸ்.எஸும் அப்பாவிகளும்....
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அத்வானி , உமாபாரதி போன்றோர் அதை இரசித்துக்கொண்டும் , மகிழ்ச்சியில் இனிப்புகளை சாப்பிட்டுக்கொண்டும் இருந்தனர்.
கரசேவகர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மசூதியை இடிக்கும் பணியில் இருந்தனர்.
பொதுவாகவே பார்ப்பனர்கள் எந்த சண்டையிலும் முன்னுக்கு நிற்பதில்லை. அதே நேரத்தில் தாம் நினைத்ததை பிறரை தூண்டி நிறைவேற்றி விடுவார்கள். அப்படி நிறைவேற்றப்பட்டது தான் "பாபர் மசூதி இடிப்பு" , பின்பு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளும்.
அதன்படியே அத்வானி வேடிக்கை பார்க்க , இந்து மத வெறியேற்றப்பட்ட அப்பாவி பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் மசூதியை இடித்துக்கொண்டிருந்தார்கள். இவர்களை தான் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்க பார்ப்பனர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
தேவைக்கு பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிவது தான் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தின் கொள்கை.
அன்றைய காலத்தில் அரசர்களுக்கு ஆலோசனை செல்பவர்களாக பார்ப்பனர்கள் இருந்தார்கள். அரசர்களை விட சிறப்பாகவே வாழ்ந்தார்கள். அவர்களுக்கு சேவகம் செய்யவே குறிப்பிட்ட மக்களை பயன்படுத்தினர். " சூத்திரர்கள் இழிதொழில் செய்யவும் , பார்ப்பனர்களுக்கும் , அரசனுக்கும் சேவகம் செய்யவே படைக்கப்பட்டவர்கள் " என்று வேதம் சொல்வதாக நம்ப வைக்கப்பட்டார்கள்.
அன்றைய காலம் போல் இப்போது மன்னராட்சி இல்லை, தீண்டாமை என்பது காலத்திற்கு காலம் மாற்றம் பெறுகிறது. அதன் நவீன வடிவமாக தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பார்க்க வேண்டும்.
பார்பனர்களுக்காக சண்டை போட , மசூதிகளை இடிக்க , மத சண்டைகளை உருவாக்க ஆள் தேவைப்படுகிறது. அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ் , இந்து முன்னணி போன்றவைகள். இவர்களுக்கான அரசியல் கட்சி பா.ச.க.
திருவிழாக்கள் நடத்துவது , கபடி போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்துவதன் மூலம் மக்களை திரட்டி பயிற்சி கொடுப்பது , இந்து மத பெருமைகள் , வேதகால பெருமைகள் பேசி மூளைச்சலவை செய்து வன்முறைக்கு தயார்ப்படுத்துவது தான் இவர்களின் வேலையாக உள்ளது.
அப்படிப்பட்ட வன்முறை தான் கோவையில் நடந்தது. வன்முறை மூலம் "இந்து மக்களின் பிரதிநிதி" என்ற பிம்பம் கிடைக்கிறது. அதை தேர்தலில் அறுவடை செய்ய நினைக்கிறார்கள்.
இதற்கு நாம் இடம் அளித்து விடக்கூடாது. இது திருவள்ளுவர் பிறந்த மண் , வள்ளலார் பிறந்த மண் , நம்முடைய வழிபாட்டு முறைகள் வேறு , நம்முடைய தமிழ் மொழியை இவர்கள் ஏற்கமாட்டார்கள்.
சமற்கிருத பார்ப்பன அடிமைகளாக நாம் இருக்க கூடாது. இதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆரிய பிரச்சரத்தை தமிழ் கொண்டும் , தமிழர் வழிபாடு கொண்டும் எதிர்த்திடுவோம்....!
Tuesday 27 September 2016
தவறை ஒத்துக்கொள்ளும் போதே நீதிக்கான பயணம் ஆரம்பிக்கிறது....
அரசாங்கம் முதலில் தனது தவறை ஒத்துக் கொள்ள வேண்டும். தங்களின் தவறை கௌரவ குறைச்சலாக நினைத்து , தவறை மூடி மறைக்க ஆரம்பிக்கும் போதே பிரச்சனைகள் அதிகமாகின்றன.
"டெங்கு காய்ச்சல் பரவுவவது உண்மை தான். இனி விழிப்போடிருந்து மக்களின் சுகாதாரத்தை காப்போம்" என்று அரசாங்கம் சொல்வதில் தவறேதுமில்லை.
உண்மையில் உண்மையை ஒத்துக்கொள்ளும் இப்படிப்பட்ட அரசாங்கம் தான் இங்கு தேவைப்படுகிறது. ஆனால் அரசாங்கமோ "மர்ம காய்ச்சல் பரவுகிறது" என்று பொத்தாம் பொதுவாக சொல்லி தமது தவறை மூடி மறைக்கிறது.
" டெங்கு காய்ச்சல் அதிகமுள்ள மாநிலம் என்ற அவப்பெயர் வந்து விடுமோ " என்ற போலி கெரளவத்திற்காக உண்மையை மறைக்கலாமா...?
தவறை ஒத்துக்கொள்ளும் போதே நீதிக்கான பயணம் ஆரம்பிக்கிறது....
ஆங்கிலம் பிறக்காத காலத்திலேயே உலகம் வியக்கும் வகையில் - ஆற்றைத் தடுத்துக் கல்லணை கட்டியிருக்கிறோம்,
"ஆனால், ஆங்கிலத்தில் தான் எல்லாம் இருக்கிறது, நம் மொழியில் எதுவுமில்லை" என்று புரிந்து கொள்கிறார்கள்.
"ரசமட்டம்" என்று தமிழில் சொன்னால் அவர் கொத்தனார். ஆனால் "மெர்குரி லெவல்" என்று ஆங்கிலத்தில் சொன்னால் அவன் இன்ஜினியர்.
"இட்லி பானை" என்று சொன்னால் அவன் கிராமத்தான். ஆனால் "பிரசர் குக்கர்" என்று சொன்னால் அவன் நாகரிகத்தவன். இவ்வாறு நாம் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம்.
"ஆடிப்பட்டம் தேடி விதை "என்பது தமிழில் பழமொழி. ஆனால், அதிலொரு அறிவியல் உண்மை இருக்கிறது.
இதை ஏன் நாம் இழக்க வேண்டும்..? இந்த அறிவியலை இந்த உலக சமூகம் ஏன் இழக்க வேண்டும்...?
...........................................
தோழர் கி.வெங்கட்ராமன்,தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
Friday 22 July 2016
காஷ்மீர் பிரச்சினையில் நம் பார்வை சரியா....?
காஷ்மீர் எங்க இருக்கு...?
ஈரோடு பக்கம் இல்ல தூத்துக்குடி பக்கம் இருப்பது போலவே சில நண்பர்கள் நினைத்துக் கொண்டு " காஷ்மீர் இந்தியாவின் அங்கம் " என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு மிகைப்படுத்தப்பட்ட இந்திய தேசபக்தியின் வெளிப்பாடு தானே தவிர உண்மை அல்ல.
1947--ல் இந்தியாவை உருவாக்கும் போது. பல தேசங்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்ற காரணத்திற்காக இந்தியாவோடு இணைந்தன. அரசு கட்டி ஆண்ட தமிழர்கள் கூட பிரிட்டிஷ் எதிர்ப்பின் காரணமாகவே இணைந்தனர். இந்தியாவோடு இணைவதற்கு தமிழ்நாட்டிலும் எதிர்ப்புகள் இருந்தது.
நாகாலாந்து , மணிப்பூர் உட்பட பல தேசங்கள் துப்பாக்கிகளை காட்டி மிரட்டி இணைக்கப்பட்டன.
சில தேசங்கள் ஆசைவார்த்திக் காட்டி இணைக்கப்பட்டன. "ஐநா சபையிடம் பேசி தனி நாட்டிற்கான பொதுவாக்கெடுப்பு நடத்துகிறோம் " என்ற ஆசைவார்த்தையால் இணைக்கப்பட்ட தேசம் தான் காஷ்மீர்.
இன்று வரை இந்தியா காஷ்மீர் மக்களிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. மாறாக அவர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்கிறது , அபகரிக்க துடிக்கிறது. பாகிஸ்தானும் மறுமுனையில் இதையே செய்கிறது.
இரு நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் அம்மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்வோம். அவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம்......!
Thursday 21 July 2016
கேரள கம்மயூனிஸ்ட்களின் தேசபக்தி...!
குளச்சல் துறைமுகம் விரிவாக்கப்பட்டால் பன்னாட்டு கப்பல்கள் , கொச்சித் துறைமுகம் செல்லாமல் குளச்சல் வழியாக தமிழர் பெருங்கடலில் பயணம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.
இதனால் , விழிஞ்சம் போன்ற கேரளத் துறைமுகங்களுக்குப் பாதிப்பு ஏற்படுமென்று கேரள கம்யூனிஸ்ட் அரசு கருதுகிறது.
தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீரும் , பாசனநீரும் தரும் முலலைப் பெரியாறு அணையை ஒரு பக்கம் உடைக்க வேண்டுமென்று கொக்கரிக்கும் மலையாளிகள்,
மறுபுறம் தமிழர்கள் குளைச்சல் துறைமுகம் கட்டக் கூடாது என்கிறார்கள். என்னே மார்சிஸ்ட்களின் சோசலிசம் ! என்னே அவர்களின் இந்திய தேசியம் ! சர்வதேசியம !.
தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் , இனத் தற்காப்புணர்வும் , தற்காப்பு ஆற்றலும் பெற வேண்டும்.....! "
------"தமிழர் கண்ணோட்டம்" இதழில்.
Tuesday 19 July 2016
காஷ்மீர் தேசத்தின் சிறப்பு...
காஷ்மீர் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு உண்டு. வெளி மாநிலத்தவர்கள் யாரும் அங்கு நிலம் வாங்க முடியாது என்ற 370--வது சட்டப்பிரிவு தான் அந்த பாதுகாப்பு.
மார்வாடிகள் , மலையாளிகள் பன்னாட்டு , வெளிநாட்டு முதலாளிகளால் அங்கு நிலம் வாங்க முடியாது. ஆதலால் காஷ்மீர் மக்களின் நிலம் கொள்ளையடிக்கப்படாமல் உள்ளது.
தமிழ்நாட்டில் இத்தகைய சிறப்பு சட்டப்பிரிவு இல்லையென்பதால் தான் , தமிழ்நாட்டு மக்களின் நிலம் , வேலைவாய்ப்பு பிற மாநில மக்களால் வேட்டையாடப்படுகிறது...
காஷ்மீர் தேசத்தில் உள்ளது போல் தமிழ்நாட்டிற்கும் 370--வது சட்டப்பிரிவு தேவை என்பதை உணர்வோம். தாயகம் காப்போம்.....!
Tuesday 12 July 2016
போராளிகளின் மரணமும்----சிங்களத்தின் நயவஞ்சகமும்.
போரின் இறுதி கட்டத்தில் பல போராளிகளை இலங்கை அரசாங்கம் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள் ரகசிய இடத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டார்கள். அப்படி கைது செய்யப்பட்ட பலரின் நிலை இன்றும் தெரியவில்லை.
இலங்கை அரசுக்கு ஆதரவாக மாறியவர்கள் ஆள்காட்டியாக மாறி போராளிகளை காட்டிக் கொடுத்தார்கள்.
" போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கி புது வாழ்வு அளிக்கிறோம் " என்று இலங்கை அரசு நாடகத்தை அரங்கேற்றியது. அதன்படி சில போராளிகளை விடுதலை செய்தது. அப்படி விடுதலை ஆன தமிழினி அக்கா உள்ளிட்ட போராளிகள் , சிறுது நாட்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனார்கள்.
மனித உரிமை ஆர்வலர்களின் கண்காணிப்பால் , முன்பு போல் துப்பாக்கியால் கொல்ல முடியாத சிங்கள அரசு , நயவஞ்சகமாக போராளிகளின் உடலுக்குள் புற்றுநோயை உண்டாக்கும் கிருமியை செலுத்திக் கொல்கிறது.
தமிழர் மீதான இன அழிப்பு தொடர்கிறது.
ஆயுதம் ஏதும் இல்லாத போதும் , தமிழ்ப் போராளிகளை கண்டு சிங்களம் அச்சம் கொள்கிறது.
எப்போதும் போல் இப்போதும் எங்கள் போராளிகள் வீர்களாகவே சாகிறார்கள். நீ கோழையாகவே வாழ்கிறாய்.....!
http://senpakam.org/49284/
Sunday 10 July 2016
பீகாரின் கல்வித்தரமும்--பாதிப்படையும் தமிழர்களும்....
பீகாரில் நடந்த பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலே முதல் மதிப்பெண் பெற்றார். மாநிலமே புகழ்ந்தது.
வழக்கம் போல செய்தியாளர்கள் பேட்டியெடுக்க சென்றனர். அப்போது தான் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கல்வித் தரத்தை கண்டு உலகமே சிரித்தது.
ஒரு செய்தியாளர் பொலிடிக்கல் சயின்ஸ் பாடத்தின் மதிப்பெண் குறித்து கேள்வியெழுப்பிய போது "பொலிடிக்கல் சயின்ஸ் என்றால் சமையற் கலை படிப்பு தானே" என்றார். மொத்தக் கூட்டமும் வாயடைத்து நின்றது.
பின்பு தான் தெரிந்தது. ஆள் மாறாட்டாம் செய்து தேர்வை எழுதியிருக்கிறார் என்று. விசாரணை நடத்தப்பட்டு இப்போது அந்த மாணவி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதே போன்று முறைகேட்டில் ஈடுபட்டதாக சிலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த முறைகேடு குறித்து அந்த மாணவி கூறியது இன்னும் அதிர்ச்சியை தந்தது.
"நான் தேர்ச்சி பெற்றால் போதும் என்று தான் அப்பாவிடம் கூறினேன். அவரோ என்னை முதலிடம் பிடிக்க செய்யுமளவுக்கு சென்று விட்டார்".
ஆக பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் கல்வித்தரத்தின் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்...?
லாலு பிரசாத் இந்திய அமைச்சராக இருந்த காலம் தொட்டு இன்று வரை ஆயிரக்கணக்கான பீகாரிகள் தமிழ்நாட்டில் தொடர்வண்டி உள்ளிட்ட துறைகளில் நுழைந்துள்ளனர்.
இவர்களின் தரம் கேள்விக்குட்படுத்தப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். வேலைவாய்பில்லாமல் இருக்கும் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டம்.
அவர்களின ஊரில் எது வேண்டுமானாலும் செய்யட்டும். அங்கையே வேலைவாய்ப்பை பெற்று வாழட்டும்.
தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு பணிகளில் 90 சதவிகத வேலைவாய்ப்பை தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் இக்கோரிக்கையை முன்னிறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. தோழர்கள் துணை நிற்க வேண்டுகிறோம்....!
Thursday 16 June 2016
இந்திய அமைச்சருக்கு பதில் :
" இந்தியை புறக்கணித்து தமிழ் என்ன முன்னேற்றம் கண்டது...? "
----இந்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
நம் பதில் : இந்திக்கார்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கும் தேசமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. இந்தியாவிலே சிறந்த மாநிலமாகவும் தமிழ்நாடு உயர்ந்துள்ளது.
Sunday 10 April 2016
குடியுரிமையா...? மொழியுரிமையா....?
அமெரிக்காவில் கூட குடியுரிமை பெற்று இந்தியாவில் வாழ்வதை விட இனிமையாக வாழலாம்.
பிறகு தாய்நாட்டிற்கும் , குடிபுகுந்த நாட்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன...?
தாய்நாட்டில் மட்டுமே நம் தாய்மொழி தேசிய மொழியாக இருக்கும். ஆனால் குடி புகுந்த நாட்டில் நம் தாய்மொழி தேசிய மொழியாக இருக்காது.
அவர்கள் திணிக்கும் மொழியையே நாம் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். குடியுரிமை பெற்று வாழலாம் அவ்வளவுதான்.
இந்தியாவில் குடியுரிமை பெற்று வாழ்கிறோமே தவிர , மொழியுரிமை பெற்று வாழ்கிறோமா....?
தமிழ் மொழி தேசிய மொழிகளில் ஒன்றாக இல்லை. இந்திய அரசு இந்தி , சமற்கிருதத்தை நம் மீது திணிக்கிறது.
பின் இந்தியா எப்படி நம் தாய்நாடாகும்....?
Monday 7 March 2016
அகதியிலும் இனப் பாகுபாடு
அகதிகளில் கூட இனப் பாகுபாடு உண்டு.
திபெத் , பங்களாதேஷ் அகதிகளுக்கு இருக்கும் சுதந்திரம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவில் இல்லை.
இந்திய முகாமில் கைதிகளாக தான் ஈழத் தமிழர்கள் உள்ளனர். இன்று கூட உச்சப்பட்டி முகாமில் வருவாய் துறை அதிகாரியின் தொடர் தொந்தரவால் ஈழத் தமிழர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பங்களாதேஷிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கு உடனே குடியுரிமை கொடுக்கப்படுகிறது. பல வருடங்களாக இங்கையே பிறந்து வாழும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது.
ஆம் , அகதிகளில் கூட இனப் பாகுபாடு உண்டு இந்தியாவில்.....
Tuesday 1 March 2016
" ஏழு தமிழர் விடுதலை " புத்தக வெளியீட்டு விழா
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூலின் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், 28.02.2016 அன்று மாலை, சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
நூல் வெளியீட்டு நிகழ்வில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொதுச் செயலாளர் இயக்குநர் திரு. ஆர்.கே. செல்வமணி, நூலை வெளியிட இயக்குநர் வெற்றிமாறன் முதற்படி பெற்றுக் கொண்டார்.
இயக்குநர் வெற்றிவெல் சந்திரசேகர், தொழில் முனைவோர் திரு. தாரை. மு. திருஞானசம்பந்தம், தமிழின உணர்வாளர் புலவர் இரத்தினவேலவர், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கச் செயலாளர் திரு. நெடுமாறன், ஊடகவியலாளர் திரு. கார்ட்டூனிஸ்ட் பாலா, ஓவியர் கு. புகழேந்தி, தமிழர் ஆன்மிகச் செயற்பாட்டாளர் திருவாட்டி. கலையரசி, ‘லாக்கப்’ நாவலாசிரியர் திரு. சந்திரக்குமார் ஆகியோர் சிறப்புப்படி பெற்றனர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்பு செய்தார்.
Sunday 28 February 2016
வாருங்கள் " ஏழு தமிழர் விடுதலை "--புத்தக வெளியீட்டு விழாவிற்கு
"ஏழு தமிழரை மீட்க அறிவாயுதம் ஏந்தி வருகிறோம்...
அதிகாரமற்ற தமிழாட்டரசின் அதிகாரத்தை காட்டுகிறோம்...
ஆரியம் கட்டிய நீதி தேவதையின் கண்களை தமிழ் அறம் கொண்டு திறப்போம்...
" ஏழு தமிழர் விடுதலை " புத்தக வெளியீட்டு விழா இனிதே நடந்து முடிந்தது. வந்திருந்த தோழர்களுக்கு நன்றி.
தேசங்கள் கதவை சாத்துகின்றன....
தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...
-
காஷ்மீர் எங்க இருக்கு...? ஈரோடு பக்கம் இல்ல தூத்துக்குடி பக்கம் இருப்பது போலவே சில நண்பர்கள் நினைத்துக் கொண்டு " காஷ்மீர் இந்தியாவின் ...
-
இணையத்தில் சண்டை போடுவது பொம்மை சண்டை போல... அடிப்பவருக்குத் தான் கை வலிக்கும்.. எவ்வளவு அடி வாங்கினாலும் பொம்மைப் போல் எதிராளிக்கும் உடல் ...