"கிழக்கு சீமையிலே" படத்திற்கு ஏ.ஆர்.இரகுமான் இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
"கிராமத்து மக்களின் கலாச்சார கதையை மையமாக எடுக்கும் பாரதிராஜா படத்திற்கு இஸ்லாமியரான ஏ.ஆர் இரகுமான் எப்படி சரி வருவார் ...?" என்று பேசியவர்கள் உண்டு.
கிழக்கு சீமையிலே படத்தின் பாடல்கள் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்றன. தன்னுடைய திறமைக்கு மதம் தடையாகாது என்பதை ஏ.ஆர்.இரகுமான் நிறுபித்தார்.
இன்றைக்கும் தேனி பக்க குடும்ப விழாக்களில் தாய் மாமன் சீர் கொண்டு வரும் போது "தாய் மாமன் சீர் கொண்டு வராண்டி" என்ற கிழக்கு சீமை படத்தின் பாடல் கட்டாயம் இடம் பெறும்.
தமிழினத்துக்கு பெருமை சேர்க்கும் ஏ.ஆர்.இரகுமானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....!
No comments:
Post a Comment