Monday 7 November 2016

தமிழர் ஒத்துழையாமை இயக்கம்

எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை ; இனி புதியப் போராட்டம் நடத்துவோம்.

காந்தியடிகள் வெள்ளை ஏகாதியப்படுத்தியத்தை , எதிர்த்து 1920--ல் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் போல், தமிழர்களை வஞ்சிக்கும் இந்திய அரசை எதிர்த்து "தமிழர் ஒத்துழையாமை இயக்கம்" நடத்துவோம். நம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம்!!!!

தமிழர் ஒத்துழையாமை இயக்கத்தின் வேலைத் திட்டங்கள் :

1. இந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து தமிழ்நாட்டை சேர்ந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும் .

2. தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்.

3. இந்திய அரசு அளிக்கும் சிறப்பு விருதுகளை தமிழ்நாட்டு சான்றோர்கள் , எழுத்தாளர்கள், கலைஞர்கள், வீரர்கள், வாங்க கூடாது. நல்லாசிரியர் விருதுகளை தமிழ்நாட்டு ஆசிரியர்கள் வாங்க கூடாது.

4. நடுவண் அமைச்சர்கள் தமிழ்நாட்டில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். நடுவண் அமைச்சர்களுக்கு கருப்பு கொடி காட்ட வேண்டும்.

5.  இந்திய அரசு வங்கிகளில் தமிழ்நாட்டு உழவர்கள் வாங்கியுள்ள வேளாண் கடன்களை திருப்பி செலுத்த வேண்டாம்.

6.  காவிரி படுகையிலிருந்து பெட்ரோலியம் , எரிவளி ,  மீத்தேன், நிலக்கரி உள்ளிட்ட எந்த கனிமத்தையும் கனிமத்தையும் இந்திய அரசு எடுக்க அனுமதிக்க கூடாது.

7.  தமிழ்நாடு அரசு கர்நாடகத்திற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

8. கர்நாடகத்தில் உற்பத்தியாகும் அரிசி, மஞ்சள், புகையிலை, உள்ளிட்ட எந்த பொருளையும் தமிழ்நாட்டு சந்தையில் அனுமதிக்க கூடாது.

இப்பொருட்களை தமிழ்நாட்டு வணிகர்களும், தமிழ் மக்களும் புறக்கணிக்க வேண்டும்.

9. நெய்வேலியிலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை அங்கு பணிபுரிவோரும் , தமிழ் மக்களும் நிறுத்த வேண்டும்.

10.  தமிழ்நாட்டில் கன்னட திரைப்படங்கள் ஓட அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டு திரைப்பட துறையினர் கர்நாடக திரைப்பட துறையினருடன் எந்தவகை தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.

"தமிழர் ஒத்துழையாமை இயக்கத்திற்கு" ஆதரவு தாரீர்.

----தமிழ்த் தேசியப் பேரியக்கம்----

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...