Tuesday 25 October 2016

உத்தர்பிரதேஷில் வாரிசு அரசியல் :

முலாயம் சிங் கட்சி உறுப்பினராக சேர்ந்த பெண்ணை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்கிறார் முதல் மனைவி இறந்த பின்பே இரண்டாவது மனைவி பற்றி வேட்புமனு தாக்கலின் போது தெரிவிக்கிறார்.

மூத்த மகனை திருப்திப்படுத்த முதல்வர் பதவி , மருமகளுக்கு பாராளமன்ற உறுப்பினர் பதவி.

இரண்டாவது மனைவியை சமாளிக்க , இன்னொரு மருமகளுக்கு பாராளமன்ற உறுப்பினர் பதவி.

அப்பாவின் ஆதரவாளர்களை அமைச்சர் பதவியிலிருந்து மகன் நீக்குகிறார். , ஆதரவாளர்களை கட்சியை விட்டு தந்தை நீக்குகிறார்.

கட்சிக்காக பாடுபட்ட உறுப்பினர்கள் , வேதனையில் இப்படியாக "வாரிசு அரசியல்" உத்தரப்பிரதேஷத்தில்....

Saturday 22 October 2016

தூக்கை தூக்கில் ஏற்றுவோம்...

தூக்கை தூக்கில் ஏற்றுவோம்...


நியாயமான மரணதண்டனை என்ற ஒன்றில்லை. மரண தண்டனையே தவறு தான்.

என்ன ஒன்று , சௌதி அரசர் தன் பேரன் என்பதற்காக சட்டத்தை மாற்றவில்லை. மக்களுக்கு என்னவோ , அதுவே தன் பேரனுக்கும் என்ற அவரின் நிலை நன்று.இதோடு நீங்கள் இந்தியாவை யோசித்துப் பாருங்கள்.

சல்மான் கான் மீது நியாயமான விசாரணை கூட நடைபெறவில்லை , தீவிரவாத செயலில் ஈடுபட்ட சஞ்சய் தத் சிறை தண்டனையை அனுபவிக்கவே இல்லை. ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லல்லு பிரசாத் உள்ளிட்ட அரசியல்வாதிகள் வெளியே நிம்மதியாக.உள்ளனர்.

 சிறை காலம் முடிந்தும் பேரறிவாளன் , நளினி உள்ளிட்ட தோழர்கள் இன்னும் சிறைக்குள்ளே. எவ்வித ஆதாரமும் இல்லாமல் ராம்குமாரை கைது செய்து சிறைக்குள்ளே சாகடிக்கப்பட்ட வரலாறுகள் இந்தியாவின் நீதி வரலாறாக உள்ளது.

இப்படியான நாட்டில் தான் "சௌதி போல் சட்டம் கடுமையாக வேண்டும்" என்ற குரல்கள் ஒலிக்கின்றன. அப்படி ஒரு நிலை வந்தால் அப்பாவிகள் தான் மீண்டும் பலி கொடுக்கப்படுவார்கள்...!

விபத்தின்றி பயணிப்போம்....

விபத்தின்றி பயணிப்போம்....


"பத்து மீட்டர் இடைவெளி விட்டு வரவும்" முன்பு , எல்லா வாகனங்களின் பின்பும் இது எழுதியிருக்கும். இன்றும் கூட பேருந்துகளில் , சுமையுந்துகளில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் வாகன ஓட்டுபவர்களில் பலர் இதை பின்பற்றுவதில்லை.

நமக்கு முன் செல்லும் ஒருவர்  எதிர்பாராமல் கீழே விழுந்துவிட்டால் , அவர் மீது ஏறிவிடாமல் தடுக்க இது பயன்படும். ஒரு விபத்து தவிர்க்கப்படும். இன்றைய அவசர உலகில் இதை யாரும் பின்பற்றுவதில்லை.

இன்றைய காலகட்டத்தில் , நாம் சரியாக வாகனம் ஓட்டினாலும் , மற்றவர்களின் தவறால் விபத்து ஏற்படும் ஆபத்தும் அதிகமுள்ளது. அந்த வகையில் நாம் இன்னும் , அதிக சிரத்தை எடுத்து வாகனம் ஓட்ட வேண்டியுள்ளது.

வாகனங்கள் அதிகரித்துவிட்ட இச்ச்சூழலில் கிடைத்த சிறு வழியையும் உயிரை பணயம் வைத்து செல்லவே முயற்சிக்கிறோம். எங்கோ நடக்கும் விபத்து நம் அருகில் நடந்து விடக் கூடாது...

எச்சரிக்கை....

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...