Sunday 10 April 2016

குடியுரிமையா...? மொழியுரிமையா....?

அமெரிக்காவில் கூட குடியுரிமை பெற்று இந்தியாவில் வாழ்வதை விட இனிமையாக வாழலாம்.

பிறகு தாய்நாட்டிற்கும் , குடிபுகுந்த நாட்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன...?

தாய்நாட்டில் மட்டுமே நம் தாய்மொழி தேசிய மொழியாக இருக்கும். ஆனால் குடி புகுந்த நாட்டில் நம் தாய்மொழி தேசிய மொழியாக இருக்காது.

அவர்கள் திணிக்கும் மொழியையே நாம் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். குடியுரிமை பெற்று வாழலாம் அவ்வளவுதான்.

இந்தியாவில் குடியுரிமை பெற்று வாழ்கிறோமே தவிர , மொழியுரிமை பெற்று வாழ்கிறோமா....?

தமிழ் மொழி தேசிய மொழிகளில் ஒன்றாக இல்லை. இந்திய அரசு இந்தி , சமற்கிருதத்தை நம் மீது திணிக்கிறது.

பின் இந்தியா எப்படி நம் தாய்நாடாகும்....?

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...