Saturday 22 October 2016

தூக்கை தூக்கில் ஏற்றுவோம்...

தூக்கை தூக்கில் ஏற்றுவோம்...


நியாயமான மரணதண்டனை என்ற ஒன்றில்லை. மரண தண்டனையே தவறு தான்.

என்ன ஒன்று , சௌதி அரசர் தன் பேரன் என்பதற்காக சட்டத்தை மாற்றவில்லை. மக்களுக்கு என்னவோ , அதுவே தன் பேரனுக்கும் என்ற அவரின் நிலை நன்று.இதோடு நீங்கள் இந்தியாவை யோசித்துப் பாருங்கள்.

சல்மான் கான் மீது நியாயமான விசாரணை கூட நடைபெறவில்லை , தீவிரவாத செயலில் ஈடுபட்ட சஞ்சய் தத் சிறை தண்டனையை அனுபவிக்கவே இல்லை. ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லல்லு பிரசாத் உள்ளிட்ட அரசியல்வாதிகள் வெளியே நிம்மதியாக.உள்ளனர்.

 சிறை காலம் முடிந்தும் பேரறிவாளன் , நளினி உள்ளிட்ட தோழர்கள் இன்னும் சிறைக்குள்ளே. எவ்வித ஆதாரமும் இல்லாமல் ராம்குமாரை கைது செய்து சிறைக்குள்ளே சாகடிக்கப்பட்ட வரலாறுகள் இந்தியாவின் நீதி வரலாறாக உள்ளது.

இப்படியான நாட்டில் தான் "சௌதி போல் சட்டம் கடுமையாக வேண்டும்" என்ற குரல்கள் ஒலிக்கின்றன. அப்படி ஒரு நிலை வந்தால் அப்பாவிகள் தான் மீண்டும் பலி கொடுக்கப்படுவார்கள்...!

No comments:

Post a Comment

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...