Saturday 22 October 2016

விபத்தின்றி பயணிப்போம்....

விபத்தின்றி பயணிப்போம்....


"பத்து மீட்டர் இடைவெளி விட்டு வரவும்" முன்பு , எல்லா வாகனங்களின் பின்பும் இது எழுதியிருக்கும். இன்றும் கூட பேருந்துகளில் , சுமையுந்துகளில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் வாகன ஓட்டுபவர்களில் பலர் இதை பின்பற்றுவதில்லை.

நமக்கு முன் செல்லும் ஒருவர்  எதிர்பாராமல் கீழே விழுந்துவிட்டால் , அவர் மீது ஏறிவிடாமல் தடுக்க இது பயன்படும். ஒரு விபத்து தவிர்க்கப்படும். இன்றைய அவசர உலகில் இதை யாரும் பின்பற்றுவதில்லை.

இன்றைய காலகட்டத்தில் , நாம் சரியாக வாகனம் ஓட்டினாலும் , மற்றவர்களின் தவறால் விபத்து ஏற்படும் ஆபத்தும் அதிகமுள்ளது. அந்த வகையில் நாம் இன்னும் , அதிக சிரத்தை எடுத்து வாகனம் ஓட்ட வேண்டியுள்ளது.

வாகனங்கள் அதிகரித்துவிட்ட இச்ச்சூழலில் கிடைத்த சிறு வழியையும் உயிரை பணயம் வைத்து செல்லவே முயற்சிக்கிறோம். எங்கோ நடக்கும் விபத்து நம் அருகில் நடந்து விடக் கூடாது...

எச்சரிக்கை....

No comments:

Post a Comment

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...