விபத்தின்றி பயணிப்போம்....
"பத்து மீட்டர் இடைவெளி விட்டு வரவும்" முன்பு , எல்லா வாகனங்களின்
பின்பும் இது எழுதியிருக்கும். இன்றும் கூட பேருந்துகளில் ,
சுமையுந்துகளில் எழுதப்பட்டிருக்கும். ஆனால் வாகன ஓட்டுபவர்களில் பலர் இதை
பின்பற்றுவதில்லை.
நமக்கு முன் செல்லும் ஒருவர்
எதிர்பாராமல் கீழே விழுந்துவிட்டால் , அவர் மீது ஏறிவிடாமல் தடுக்க இது
பயன்படும். ஒரு விபத்து தவிர்க்கப்படும். இன்றைய அவசர உலகில் இதை யாரும்
பின்பற்றுவதில்லை.
இன்றைய காலகட்டத்தில் , நாம் சரியாக வாகனம் ஓட்டினாலும் , மற்றவர்களின் தவறால் விபத்து ஏற்படும் ஆபத்தும் அதிகமுள்ளது. அந்த வகையில் நாம் இன்னும் , அதிக சிரத்தை எடுத்து வாகனம் ஓட்ட வேண்டியுள்ளது.
வாகனங்கள்
அதிகரித்துவிட்ட இச்ச்சூழலில் கிடைத்த சிறு வழியையும் உயிரை பணயம் வைத்து
செல்லவே முயற்சிக்கிறோம். எங்கோ நடக்கும் விபத்து நம் அருகில் நடந்து விடக்
கூடாது...
No comments:
Post a Comment