Saturday 5 May 2012

விடுதலைப் புலிகள் 36 ஆம் ஆண்டு தொடக்க நாள்......!

                                                          தன் மக்கள் படும் துன்பத்தை கண்டு கோபமடைகிறான் அந்த இளைஞன்."அமைதியாக போராடி நாம் என்ன கண்டோம், இனி நாமும் சிங்களருக்கு புரியும் பாசையில் பேசினால் தான் சரி" என்று ஆயுதத்தை எடுக்க முடிவு செய்கிறான் அந்த இளைஞன்.17 வயதில் வீட்டை பிரிந்து "புதிய தமிழ்ப் புலிகள்" என்ற அமைப்பை ஆரம்பிக்கிறான்.தன் அக்காவின் திருமணத்தின் போது தனக்கு அணிவித்த மோதிரத்தை விற்று துப்பாக்கி வாங்குகிறான்.

                                                         "ஒரு துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஈழத்தை பிடித்து விட சிறு பிள்ளைகள் கிளம்பி விட்டனர்" என்று பலர் கேலி பேசுகின்றனர்.மனம் தளராது தொடர்ந்து போராடி ஒரு நாட்டிற்கென்று இருக்க வேண்டிய கால்லுரிகள்,பள்ளிகள்,அரசியல் துரைகள் மற்றும் பாதுகாப்புக்காக தரைப்படை,வான்படை,கப்பல் படை மற்றும் எந்த நாட்டிலும் இல்லாத தற்கொலைப்படை அமைப்பையும் உருவாக்கிய போது கேலி பேசியவர்கள் வாயடைத்து நிற்கிறார்கள்.

                                                          அந்த இளைஞன் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன்.மே 5 1976 ஆம் ஆண்டு புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பை "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்று மாற்றினார்.இன்று தமிழ் மக்களை தலை நிமிர செய்த விடுதலைப் புலிகள் அமைப்பின் 36 ஆம் ஆண்டு தொடக்க நாள்....!

No comments:

Post a Comment

தேசங்கள் கதவை சாத்துகின்றன....

தேசங்கள் கதவை சாத்துகின்றன.... "பிற நாட்டினரின் வருகை காரணமாக , தங்கள் நாட்டினர் வேலை இழந்து பாதிக்கப்படுவதை உணர்ந்து , சமீபத்தி...